![](admin/uploads/.60c4ab63d51b04.52936351.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டை: செங்கோட்டை நூலகத்தில் வைத்துவாசகர் வட்டம் சார்பாக செங்கோட்டை கவிஞர் ஐயப்பன் அவர்கள்எழுதிய "மௌனத் தீ" என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாநடைபெற்றது. இவ்விழாவிற்கு வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் அவர்கள் தலைமை தாங்கினார்.போட்டி தேர்வு பொறுப்பாளர் விழுதுகள் சேகர் வரவேற்புரைஆற்றினார் .65 நூல்கள் எழுதிய எழுத்தாளர். முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் நூலை வெளியிட்டார் முதல் பிரதியை
இலஞ்சிராமாமிபள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் முத்தையாஅவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியைகோவில்பட்டி எழுத்தாளர் பார்த்திபன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.எழுத்தாளர் இளங்குமரன் தங்கராஜ் வேளாண்மை துறைஅலுவலர் ஷேக் மைதீன் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். எழுத்தாளர்ஐயப்பன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். முடிவில் நூலகர்ராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.