Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10,11ஆம் வகுப்பு தேர்வில் ஆவுடையானூர் பள்ளி சிறப்பிடம்

மே 23, 2023 03:59

பாவூர்சத்திரம்: 10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம் பெற்றது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 322 பேரில் 314பேர் தேர்ச்சிபெற்று, 97.5 சதவீத வெற்றியை பெற்றனர்.மாணவி கிருஷ்ணபிரியா 482 மதிப்பெண் பெற்று பள்ளியில்முதலிடம் பெற்றார். இதே போல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 430 தேர்வுஎழுதியதில், 416 பேர் தேர்ச்சி பெற்று, 97 சதவீத வெற்றியைபெற்றனர். மாணவன் குமரகுருபரன் 576 மதிப்பெண் பெற்றுமுதலிடமும், அஸ்வின் பாலா 532 மதிப்பெண் பெற்று 2வதுஇடமும், ஹலன் பிளஸ்ஸி 526 மதிப்பெண் பெற்று 3வதுஇடமும் பெற்றனர்.சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகிமோயீசன் அடிகள் பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித்தலைமை ஆசிரியர் சே.அந்தோணி அருள் பிரதீப்,நிர்வாக அலுவலர் அருள் செல்வராஜ், பள்ளி ஆசிரியர்கள்கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்