Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சி.பா ஆதித்தனார் நினைவுதினம் அனுசரிப்பு

மே 24, 2023 08:18

தென்காசி:அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள்  கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் சி.பா ஆதித்தனார் அவர்களின் 42வது ஆண்டு  நினைவு நாளை முன்னிட்டு சி.பா. ஆதித்தனார் திரு. உருவ படத்திற்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர்  அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் பொதுச்செயலாளர் ஆனந்த், காசிராஜன் துனை  செயலாளர் ஜாண் டேவிட், முன்னிலையில்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும்போது மே மாதம் 24 ஆம் தேதியை தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பனை  தொழிலாளர்கள் தினமாக அறிவித்து இருக்கிறது.

உடல் மன்னுக்கு உயிர் தமிழுக்கு என்று சொன்ன தமிழர் தந்தை  சி.பா.ஆதித்தனார் அவர்கள் நினைவுதினம் ஆகும். தமிழக அரசு பனைமீது திணிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.என்று  ஐந்து ஆண்டுகள் சட்டமன்றத்தில் போராடியவர் அன்றைய அரசு பனை வரியை ரத்து செய்ய முடியாது என்று சொன்ன காரணத்தினால்  தான் வகித்த மேல்சபை உறுப்பினர்  பதவியை ராஜினாமா செய்தவர்.அதன் பிறகு பனைத் தொழிலாளர்களை  ஒன்றுசேர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி பனைக்கு போடப்பட்ட  வரியை ரத்து செய்ய வைத்தவர் பனை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்று கொடுத்தவர்   தமிழ்நாட்டில் பனைத் தொழிலாளர்களுக்காக சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த மாமனிதர் சி.பா. ஆதித்தனார். 
அவர்கள் நினைவு நாளை  பனைத் தொழிலாளர்கள் தினமாக தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு கடைபிடித்து வருகிறது. என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், நிர்வாகிகள் பன்னீர் கடல்சாமி, புதுமை ஆல்பர்ட் பனை தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் தனபால்,  செபஸ்தியான், திருச்சி காட்டூர் இளைஞர் அணி செயலாளர் வர்க்கீஸ்ராஜா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்