Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செவிலியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க 17-ந் தேதி கடைசி நாள்

மே 14, 2019 11:14

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பி.எஸ்சி. தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் செவிலியர்கள் சவுதி அரேபியாவில் பணி நியமனம் பெற அந்த நாட்டின் அமைச்சகம் வருகிற 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை கொச்சியில் நேர்காணலை நடத்துகிறது.

நேர்காணலில் கலந்து கொள்ள 5 ஆண்டு பணி அனுபவம் வேண்டும். தகுதியுள்ள செவிலியர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட், ஆதார் ஆகியவற்றின் நகல்கள், வெள்ளைநிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 17-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசியிலோ அல்லது 82206-34389 என்ற செல்போனிலோ தொடர்பு கொள்ளலாம்.

தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம், இலவச உணவு, இருப்பிடம் வழங்கப்படும். மேலும், 35 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்