Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கர்ப்பப்பை அறுவை சிகிச்சை 

மே 25, 2023 09:23

தென்காசி: செங்கோட்டை அரசு மருத்துவமனையில் வல்லம் என்ற ஊரை சார்ந்த முருகேஸ்வரி என்ற 46 வயது பெண்மணிக்கு சுமார் இரண்டரை கிலோ எடை கொண்ட கட்டியுடன் கூடிய கர்ப்பப்பை அகற்றம் அறுவை சிகிச்சை முதல் முறையாக செங்கோட்டை அரசுமருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்தேறியது.
தென்காசி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா MD,GGO அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் நோயாளியின் அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு தனது அனுபவத்தின் மூலமாக  இணை இயக்குனர்  அறுவை சிகிச்சை மருத்துவ குழுவில் இணைத்துக் கொண்டு அவரதுதலைமையிலான மருத்துவ குழுவினர்களால் அறுவை சிகிச்சை சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றது. நோயாளி நலமுடன் உள்ளார்.
இது போன்ற வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன்  கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்