Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.ஒரு கோடியில் சாலைப்பணி

மே 26, 2023 09:07

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.கீழப்பாவூர் பேரூராட்சியில், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் சுரண்டை ரோடு வாய்க்கால் பாலம் முதல்  பெரியகுளம் கரை, வடக்கு சிவகாமிபுரம் நாடார் தெரு, வணிகர் கீழத்தெரு மற்றும் 2ம் நம்பர் ரோடு ஆகிய பகுதிகளில் பழுதடைந்த தார்சாலையினை மேம்பாடு செய்தல் பணி தொடக்க விழா நடைபெற்றது.
கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் ஜா.மாணிக்கராஜ், துணைத்தலைவர் கி.ராஜசேகர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பணியினை தொடங்கி வைத்து பேசினார். 

மேலும்பேரூர் திமுக செயலாளர் ஜெகதீசன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் செல்வன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்  மாரிச்செல்வன், ஆ.சுப்பிரமணியன், முருகன், பெரியசாமி, தங்கபழம், ராமசாமி, ராமகிருஷ்ணன், காலசாமி, துரை, ராம்குமார், பூங்குன்றன், மாயாண்டி, திருவம்பலம் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்