Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறை மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவிகள் என மொத்தம் ரூ. 68,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்கள்.