Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம்

மே 30, 2023 10:46

தென்காசி: கீழப்பாவூரில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
கீழப்பாவூரில் பேரூர் திமுக இளைஞரணி சார்பில், திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்  வடக்கு பஜார் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. பேரூர் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் வரவேற்று பேசுகையில், பேரூராட்சி பகுதியில் செயல் படுத்தப்பட்டு, நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து பட்டியலிட்டு பேசினார்.
மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி தொகுத்து வழங்கினார். மாநில பேச்சாளர்கள் வரக்கூர் காமராஜ், வெல்டிங் மாரியப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பளரும், செயற்குழு உறுப்பினருமான ஆறுமுகச்சாமி ஆகியோர் பேசினர். 

மேலும் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி சக்தி சுப்பிரமணியன், குற்றாலம் கவுன்சிலர் கிருஷ்ணராஜா, பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், துணை செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி இளையபெருமாள், ஒன்றிய பிரதிநிதி மலைச்சாமி, வார்டு செயலாளர்கள் சுடர் ராஜ், மாரியப்பன், கணேசன், ராமகிருஷ்ணன், இராமர், குத்தாலிங்கம், நாராயணன், கருடையூர் பாலசுப்பிரமணியன்,சரவணன், பழனி, கோபால், சங்கரன், பால்ராஜ், முப்புடாதி, மாரிக்கண்ணன், பூங்குன்றன், மகாராஜன், சீனிப்பாண்டி, ஸ்ரீPதர், கவுன்சிலர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பேரூர் இளைஞரணி சுடர்பாண்டியன் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்