Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வியாபாரிகள் சங்கம் சார்பில் முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா

மே 31, 2023 04:58

சங்கரன்கோவில்: அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலின் துணைக்கோவிலான முப்பிடாதி அம்மன் கோயில் 56-ஆம் ஆண்டு பாலாபிஷேகம், சந்தன அபிஷேக விழா, சங்கரன்கோவில் தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்தது. இதனை முன்னிட்டு பால்குட வீதி உலா நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து அபிஷேகங்களும் தொடர்ந்து அன்னதானமும்  நடந்தது. அதைத் தொடர்ந்து இரவு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் செய்யது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் துணைச் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், கண்ணையா, எம்எஸ்கே கருப்பசாமி, சுப்பிரமணியன், வேல்சாமி, முருகன், மூர்த்தி, முத்துக்குமார் ,நாராயணன், முத்துசாமி, கருப்பசாமி, முப்பிடாதி, பாலசுப்ரமணியன், துரைராஜ், ஜெகநாதன், குருசாமி, ரவிச்சந்திரன், பரமசிவம், இசக்கி ராஜன், சின்னபாண்டியன், நடராஜன் மற்றும் தினசரி நாளங்காடி வியாபாரிகள், லோடுமேன்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்