![](admin/uploads/.60865291d15b50.76392570.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2023 ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் பசலி.1432 ஜமாபந்தி நிறைநாள் நிகழ்ச்சி தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) மற்றும் தீர்வாய அலுவலர் ஷீலா தலைமையில் நடைப்பெற்றது. வீகே புதூர் வருவாய் வட்டாட்சியர் தெய்வசுந்தரி, வட்டாட்சியர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீகே புதூர் வட்டம் சிவகுருநாதபுரம், கருவந்தா, வீகே புதூர், கருவந்தா, ஊத்துமலை ஆகிய ஐந்து குறுவட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள வருவாய்துறைக்கான கணக்குகள் சாரிப்பார்த்தல் பொதுமக்களிடம் 169 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு இதில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழநி நாடார் சிறப்பு அழைப்பாராக கலந்து கொண்டு பத்து பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 15- பயனாளிகளுக்கு வரன்முறை பட்டா, 4 - பயனாளிகளுக்கு முதியோர் உதவிதொகைக்கான ஆணைகளை வழங்கங்கினார். நிகழ்வில், விகே புதுார் பஞ்சாயத்து தலைவர் மகேஷ்வரி, பேச்சிமுத்து, தாயார் தோப்பு ராமர், மருக்காலன்குளம் பஞ்சாயத்து தலைவர் மருத நாச்சியார் வாடியூர் பஞ்சாயத்து தலைவர் பதிவர் (எ) அந்தோணிசமூக பாதுகாப்பு திட்டம் தனி.தாசில்தார் மகா லெட்சுமி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயமுருகன், மண்டல துணை வட்டாட்சியர் முருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தாமரை செல்வன், ஜமாபந்தி கணக்கு அலுவலர்கள் ஜெயந்தி, கார்த்திக் துணை வட்டாட்சியர் கருத்தப்பாண்டியன், குறுவட்ட வருவாய் அலுவலர்கள், ராமர், கண்ணன், ராஜாத்தி, சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.