Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆதிதிராவிட நலத்துறை ஆய்வு குழுக்கூட்டம்

மே 31, 2023 05:02

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சென்னை ஆதிதிராவிட நல ஆணையர் உத்தரவின் பெயரில் ஆதிதிராவிட நல துறையின் சார்பில் அனைத்து ஊராட்சி தலைவர்களுடன் ஆய்வு குழு கூட்டம் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர்  நடராஜன் (பொறுப்பு) தலைமையில் நடைப்பெற்றது. மயானபாதை வசதி செய்து கொடுப்பது மற்றும் சமுதாய நலக்கூடம் வசதி செய்து கொடுப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. தென்காசி கோட்டம் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் கண்ணன், சங்கரன்கோவில்  தனி வட்டாட்சியர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆதி திராவிட நல அலுவலக கண்காணிப்பாளர்  மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள், மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்