![](admin/uploads/.5ced1214747e81.32119584.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: திருச்சியில் குறு வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தாக்கப்பட்டதை கண்டித்து வீ.கே புதூர் வட்டாடச்சியர் அலுவலகத்தில் உணவு இடைவேளையின் போது தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் தெய்வசுந்தரி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் வட்டாட்சியர் ராம்குமார் சமுக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் மகாலெட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம்
தென் மண்டல சின்ராஜ், வட்டத்தலைவர் தலைவர் கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நிகழ்வில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம், நில அளவை துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் சங்க இணை செயலாளர் சினிவாசன் நன்றி கூறினார்.