Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாவூர்சத்திரத்தில் ஆதார் சிறப்பு முகாம் தொடக்கம் 

மே 31, 2023 07:32

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் அஞ்சல் அலுவலகம் இணைந்து நடத்தும் ஆதார் சிறப்பு முகாம் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 4 நாள்கள் நடைபெறுகிறது.  தொடக்க நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத்தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். சங்க செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை, பள்ளி தலைமை ஆசிரியை தா.ம.ஜான்சி ராணி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தனர். புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், அஞ்சலக தென்காசி கோட்ட ஆய்வாளர் ராமசாமி, துணை அஞ்சல் அதிகாரி ஜெயக்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆனந்தசெல்வி, உறுப்பினர் சங்கர், அரிமா சங்க உடனடி முன்னாள் தலைவர் த.அருணாசலம், முன்னாள் செயலாளர் கலைச்செல்வன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இந்த முகாம் வருகிற 3-ம் தேதி சனிக்கிழமை வரை  நடைபெறவுள்ளது. எனவே புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் தேவைப்படுவோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்