![](admin/uploads/.5ea6c2d5eb75f5.94289631.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சங்கரன்கோவில்: நெல்லையிலிருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்தை நேரில் சந்தித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ராஜா கோரிக்கை விடுத்தார்.
அவர் அளித்த கோரிக்கையில், நெல்லையிலிருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில், ஈரோடு - நெல்லை ரயிலை தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டித்தல், சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் லிப்ட் அமைத்தல், கூடுதலாக விளக்குகள் அமைத்தல், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
முன்னதாக நெல்லை - தாம்பரம் ரயிலுக்கு சங்கரன்கோவில் ரயில் நிறுத்தம் வழங்கியதற்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்.
கோரிக்கைகளை பரிசீலனை செய்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவும், தென்காசி வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்குவதற்கு சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும். எனவும் தெரிவித்தார்.
மேலும் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் லிப்ட் அமைப்பதற்கு பூர் வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சந்திப்பின்போது ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை உடன் இருந்தனர்.