![](admin/uploads/.61de6161ef0a14.00666276.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வீரவநல்லூர்: வீரவநல்லூர் பேரூராட்சி மன்றத்தில் வரி வசூலராக பணியாற்றி வந்த முகைதீன் பிச்சை அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு வீரவநல்லூர் பேரூராட்சி மன்றத்தில் வைத்து பணி நிறைவு பாராட்டு விழா பேரூராட்சி மன்ற தலைவர் சித்ரா, தலைமையில் செயல் அலுவலர் காதர், சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் அல்லாபிச்சை, வீரவநல்லூர் திமுக அவைத் தலைவர் இரா. பழனி, செயலளார் வீ. சுப்பையா, துணைத்தலைவர் வசந்த, சந்திரா, கவுன்சிலர்கள் சந்திரா, வெங்கடேஸ்வரி, முத்துக்குமார், சந்தானம், அனந்தராமன், ஆறுமுகம், சண்முகவேல், கல்பனா, திமுக துணைச் செயலாளர் முத்து ராமலிங்கம், தொண்டரணி சுபாஷ் உட்பட பேரூராட்சி மன்ற பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெறும் முகைதீன் பிச்சை அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.