Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக பால் தினத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கு இலவசமாக பால்

ஜுன் 03, 2023 11:04

செங்கோட்டை: செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக பால் தினத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஜம்.ஜம். பசும்பால் என்ற பால் நிறுவனத்தின் மூலம் பால் தினத்தை வலியுறுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் உள்ள  நோயாளிகள், நோயாளி உடன் இருப்பவர்கள் என அனைவருக்கும் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் மருத்துவர் ராஜேஷ், கண்ணா ஆகியோர் பாலை  இலவசமாக வழங்கினர். இச்செயல் அனைவரின் பாராட்டையும், கவனத்தையும்  பெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்