![](admin/uploads/.61121694a24677.55317377.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வாசுதேவநல்லூர்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் இனாம் கோவில்பட்டி பஞ்சாயத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட அருள்மிகு செல்லியரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மற்றும் மாநில துணை தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. ஊர் நாட்டாமைகள் மாடசாமி, லட்சுமணன், பெருமாள்ராஜ், மாடசாமி, சுந்தர், மாடசாமி, சின்னநாட்டாமைகள் மாரியப்பன், கோடூர்சாமி, உடையார், ஆறுமுகசாமி, பஞ்சாயத்து துணைதலைவர் சீனிபாண்டி, வாணியராஜ், மகேந்திரன், குட்டி ராஜ், பால கணேஷ், மாடசாமி, அரிச்சந்திரன், பெருமால்ராஜ், முத்துசாமி மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் .
பின்னர் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டபத்தில் வைத்து ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.