Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவலாக்குறிச்சி ஊராட்சிப்புதூரில் பகுதி நேர ரேஷன் கடை

ஜுன் 03, 2023 11:06

ஆலங்குளம்: காவலாக்குறிச்சி ஊராட்சி, புதூரில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க ஏற்பாடு செய்த திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் காவலாகுறிச்சி ஊராட்சி புதூர் பகுதி மக்கள் ரேஷன் கடையில் பொருள்களை வாங்குவதற்கு வெண்ணிலிங்கபுரம், காவலாக்குறிச்சி ரேஷன் கடைக்கு சென்று வந்தனர். இதனால் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு, புதூர் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர், இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை விடுத்தார். மாவட்ட செயலாளரின் கோரிக்கையை ஏற்று, புதூர் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து புதூர் பகுதி பொதுமக்கள் சார்பில், காவலாகுறிச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வராஜ், 9வது வார்டு உறுப்பினர் புதுர் ஜெயக்குமார் ஆகியோர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யம்பெருமாள் தலைமையில், மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்