Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி

ஜுன் 05, 2023 12:42

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம் பட்டி கிளை நூலகத்தில் பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக கோடைவிடுறையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம்(01-மே-2023) முதல் (31-மே-2023) வரை தினமும் 2 மணி நேரம் ஆங்கில வகுப்பு நடத்தப்பட்டன.
இதில் சுமார் 35 மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். ஆங்கில மொழியில் பேச பயிற்சி, அடிப்படை ஆங்கில இலக்கணம், ஆங்கில செய்தித்தாள் வாசிப்பு பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டன. வகுப்பின் இறுதி நாளில் அடிப்படை ஆங்கிலத் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பபட்டன.
கோடைவிடுமுறை ஆங்கில சிறப்பு வகுப்பு நிறைவு விழா இன்று நூலகத்தில் நடைபெற்றது. 

மேலும் இவ்விழாவிற்கு மதனகோபால் தலைமை வகித்தார். நூலகர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட செயலாளர் தங்கராஜ் வரவேற்புரையாற்றினார். தென்மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு, தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு ஆங்கில மொழி பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடையே பேசினார். 

இதனை தொடர்ந்து தேர்வில் முதல் ஐந்து இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும், அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் , ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. வாசகர் வட்ட நிர்வாகி சந்துரு நன்றியுரையாற்றினார். விழாவில் வாசகர் வட்ட நிர்வாகிகள் முத்துக்குட்டி, சாரல் சசிகுமார், பிராபகர், சேர்மன்,கார்த்திகைராஜன், வாசகர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதன் படி விழா ஏற்பாட்டினை நூலக உதவியாளர் கனகராஜ் செய்திருந்தார்.
 

தலைப்புச்செய்திகள்