Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
இராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 288 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து ஆரோக்கியத்துடன் வீடு திரும்பவும், கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் குருவையா மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.