Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியப்பபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஜுன் 05, 2023 12:51

பாவூர்சத்திரம்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அரியப்பபுரத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை ஒன்றிய கவுன்சிலர் வளன் ராஜா தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளா க.சீனித்துரை, யூனியன் சேர்மன் சீ.காவேரிசினித்துரை ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அரியப்பபுரத்தில்  இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 

மேலும் வண்ணார்பேட்டை ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம், திருநெல்வேலி பாரதி இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மென்ட் இணைந்து நடத்திய இம்முகாமினை  ஒன்றிய கவுன்சிலர் ஜே.வளன் ராஜா தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். கண் ஒளி பரிசோதனையாளர் இசக்கிராஜா மற்றும் குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். இதில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்