![](admin/uploads/.6350ffe6c74b95.70885336.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வாசுதேவநல்லூர்: பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலையின் 39-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சிவகிரியில் புகழ் பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா நாளன்று தென்காசி அ.ஆனந்தன் அறக்கட்டளை சார்பாக சிவகிரி நகரத்தின் பல இடங்களில் பக்தர்களுக்கு வழங்க நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நீர் மோர் பந்தலைகாலையில் நீர்,மோர் பந்தலை பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணை தலைவர் அ.ஆனந்தன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாலை 5 மணி வரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீர் மோர், பானகரம் வழங்கப்பட்டது.
கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள்முழங்க விரதம் இருந்த பக்தர்கள் மாலை 6 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் சீதாராமன் மற்றும் இராகவன், வேல்முருகன், அஜீத், அரிச்சந்திரன், சங்கரநாராயணன், சுமன், ஆனந்தன் பிரதர்ஸ் , விழாக்கமிட்டியார்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.