Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின் தொடக்கமாக பள்ளி குழந்தைகள்,இல்லம்தேடிகல்வி தன்னார்வளர்கள், நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்கள்,பொதுமக்கள் வாசகர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட அளவிலான மாபெரும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா எஸ்எஸ்ஏ மாவட்ட உதவி திட்ட அலுவலர் சீவலமுத்து தலைமையில் நடைபெற்றது.
வட்டார நூலகர்பிரமநாயகம் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் மாரியப்பன் இளமுருகன் எஸ்எஸ்ஏ திட்ட அலுவலக கணக்கர் மாரியப்பன் ஆசிரியர்கள் ஆறுமுகம் ஜெயசிங் கவிஞர் குழத்தைஜேசு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் உதவிதிட்ட அலுவலர் சீவலமுத்து 310 வது புரவலராகவும் முகம்மது மசூது 311 வது புரவலராகவும் இணைந்தார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பதக்கம் புத்தகம் பரிசளிக்கப்பட்டது.