Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட ஈஷா இலக்கு

ஜுன் 05, 2023 05:22

தென்காசி: உலக சுற்றுச்சூழல் தினத்தன்று (ஜூன் 5) தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நட  துவங்கி இருக்கிறது காவேரி கூக்குரல் இயக்கம்.  
கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. 

அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டு இலக்கு 1.1 கோடி மரங்களை நடுவது. தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட உள்ளன.  சுமார் 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட உள்ளனர்.

குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவ சாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடவுள்ளனர். இதுதவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தென்காசியில், குற்றாலம் பிரதான சாலையில் உள்ள ஈஷா நர்சரியில் ஜூன் 5 காலை 9.30 மணிக்கு மரக்கன்று நடும் பணிகளின் துவக்க விழா நடைபெற்றது.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், தென்காசி நகர்மன்ற தலைவர்சாதிர், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர்  சுற்றுச் சூழல் ஆர்வலர் பாண்டியராஜா   ஆகியோர் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜா மற்றும் பழனிநாடார் ஆகியோர்  மரக்கன்றை நடவுசெய்து விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர் பாண்டியராஜா அவர்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் மரங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் பாவூர்சத்திரம் விஷிறிக்ஷிலி பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், விவசாய பெருமக்கள், ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை சிறப்பித்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கம்: மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர். விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை மிகக்குறைந்த விலையான 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவ தற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். கிளை நூலகர் சுந்தர் நன்றியுரை ஆற்றினார் நூலகர்கள் ஜூலியாராஜ் செல்வி நிஹ்மதுனிஸா வஉசி வட்டார நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் சலீம் முகம்மது முருகேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்