![](admin/uploads/.612f166e3d4aa4.94589809.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பேட்டை: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு பேட்டை ம.தி.தா.இந்துக் கல்லூரி,எல் அன் டி , நெல்லை வனத்துறை இணைந்து ஆயிரம் மரக்கன்றுகள் நடும்விழா கல்லூரி வளாகத்தில் வைத்து நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி கல்வி கமிட்டி உறுப்பினர் நாதன் தலைமை வகித்து கல்லூரி வளாகத்தில் வாகை, சீதா, நாவல், வேம்பு புங்கை, வாதமடக்கி, உள்ளீட்ட பல்வேறு மரக்கன்றுகளை நாட்டினர். நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் இளங்கோ, எல் அன் டி திட்ட மேலாளர் வெங்கடேஷ்,, வனசரக அலுவலர்கள் சிவ சங்கரன், செல்வகுமார், நாட்டு நலப்பணி திட்டம் இந்து கல்லூரி புறவழித்திட்ட மாணவ ,மாணவிகள் கல்லூரி பேராசிரியர் ,பேராசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.