Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பஸ்ஸில் படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் அவதி

ஜுன் 07, 2023 11:47

பாவூர்சத்திரம்: தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு பாவூர்சத்திரம் வழியாக நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் அந்த பஸ் வந்த போது பஸ்சின் பின்புற வாசலில் உள்ள படிக்கட்டு  சாலையோரம் இருந்த தடுப்பில் பட்டு உடைந்தது .
இதனால் அந்த பஸ்ஸில் வாசல் வழியே பயணிகள் ஏறவும், இறங்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. பெண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.  இது குறித்து தென்காசி அரசு பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால்  பயணிகள் அனைவரும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்