![](admin/uploads/.609b6bfa957fd1.22764400.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் , தென்காசி, ஆசாத் நகர் அருகிலுள்ள மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், தமிழ்நாடு முதல்வர் (07.06.2023) அன்று, முத்தமிழறிஞர் கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, பருவமழைக்கு முன், தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 7700 மரக்கன்றுகள் நட திட்டமிட்டப்பட்டுள்ளது. மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சார்ந்த இம் மரக்கன்றுகள் 24 மாத கால வளர்ச்சி உடையவை என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் இராஜசேகர், உதவிப் பொறியாளர் பூமிநாதன் மற்றும் சாலை ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.