Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முக்கூடல் வட்டாரத்தில் உழவர் பேரணி

ஜுன் 09, 2023 12:22

முக்கூடல்: முக்கூடல் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் திருப்புடைமருதூர் கிராமத்தில் கிஸான் கோஸ்திஸ் பேரணி நடத்தப்பட்டது. இந்த உழவர் பேரணிக்கு முக்கூடல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். துணை வேளாண்மைஅலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் திருப்புடைமருதூர் ஊராட்சி மன்றதுணைத்தலைவர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் மண்வளம், நுண்ணூட்ட பயன்பாடு, சிறுதானிய சாகுபடி, உயிர் உரம், மற்றும் உழவன் செயலி போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு பதாகைகளை விவசாயிகள் கொண்டு சென்றனர். மேலும் பேரணியின் போது இந்த வாசகங்களை விவசாயிகள் கோஷமிட்டு சென்றனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் பிருந்தா உதவி கால்நடை மருத்துவர்கள் இராதகிருஷ்ணன் மற்றும் முயல்வி ஆகியோர் துறைசார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

இந்த நிகழ்வின் போது குளத்து வண்டல் மண் பயன்பாடு குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. இந்த உழவர் பேரணியில் திருப்புடைமருதூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சதிஷ்குமார் மற்றும் அட்மா அலுவலர்கள் சுஜித், இராஜாமணி ஆகியோர் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்