Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய திறனாய்வு தேர்வு நூல் வெளியீட்டு விழா

ஜுன் 10, 2023 01:22

வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் வட்டார கல்விஅலுவலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நூல்வெளியீட்டு விழா அண்ணாமலை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு வருகை புரிந்தவர்களை திரு.மாடசாமி ஆசிரியர் அவர்கள் வரவேற்றார்கள். தென்காசி ஒன்றியத்தைச் சார்ந்த கரிசல்கு குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் திரு இல.பாபு வேலன் ஏழாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் வினா விடை நூலினை தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நூலினை வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர் திரு ரா. மாரியப்பன் அவர்கள் வெளியிட சுப்பிரமணியபுரம் எஸ் எம் எம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தா. நவீனராஜ் பெற்றுக் கொண்டார்கள். நூலுக்கான பொருள் உதவியினை ஏவிஎஸ் தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர் அருள் சேவியர் வழங்கினார். நூலினை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்டவருக்குவி.அருள்ராஜ் ஆசிரியர் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்