Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஜுன் 10, 2023 01:44

தென்காசி: தென்காசியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி. பிரிஜ்  பூசனை கைது செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை முருகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப் பினர் வெங்கடேஷ், முதுகலை பட்டதாரிஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், அனைத்து மருந்தக சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், வேலை வாய்ப்பு துறை ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் மார்த்தாண்ட பூபதி ஆகியோர் பேசினர்.

மேலும் அரசு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் சேகர், வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், அங்கன்வாடி ஊழியர் சங்கமாவட்ட துணை தலைவர் சரஸ்வதி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோபிநாத், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், நிலஅளவை ஒன்றிணைப்பு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மகளிர் துணைகுழு அமைப்பாளர் செல்வி, மல்லிகா, சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆகியோர் பேசினர்.

மாவட்ட செயலாளர் துரைசிங் நிறைவு உரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் ராஜ் நன்றி கூறினார்

தலைப்புச்செய்திகள்