Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்து கிருஷ்ணபேரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஜுன் 12, 2023 08:12

பாவூர்சத்திரம்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, முத்துகிருஷ்ணபேரியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், முத்துகிருஷ்ணபேரியில், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்தியராஜ் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன் தலைமை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை, மேற்கு ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்தியராஜ் வரவேற்றார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, முகாமினை தொடங்கி வைத்தார்.  ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் கண் ஒளி பரிசோதனையாளர் இசக்கிராஜா மற்றும் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சீ.பொன்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், தொண்டரணி துணை அமைப்பாளர் பொன்மோகன், மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் (எ) தினேஷ், கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சொட்டுசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்  விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், மல்லிகா, தங்கேஸ்வரன், காசிபாண்டி, ஜெயக்குமார், உலகளந்தர், மகேந்திரன், தங்கபெருமாள், நயினார், அருள் சிவபெருமாள், கதிரேசன், ராமர்,அமிர்தவல்லி,  ராமசாமிநாடார், வேலு, சிவராஜ்பாண்டியன், திருமலைக்குமார், காளிமுத்து, சின்னமுருகன், ராஜேந்திரன், லட்சுமணபெருமாள், அருணாசலம், லெட்சுமணன், மாரிமுத்து, கணேசன், முருகன், ரூபன், சண்முகநாதன், ராஜன், லெட்சுமணபெருமாள், சுப்பிரமணியன், விஜயஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சத்தியராஜ் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்