![](admin/uploads/.60e94782bac5a0.81735493.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கோட்டை: செங்கோட்டை மேலுார் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் மேலான ஆணைக்கிணங்க
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்துதலின் பிரகாரம், தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழிகாட்டுதலின்படி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கி சிறப்பு செய்கிற நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் விஎஸ். ராஜன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமையா பள்ளி மேலாண்மை குழு தலைவர் தங்கம் துணைத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனா். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைதொடா்ந்து செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் மாணவ- மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள் கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் வழக்கறிஞர் மு. ஆபத்துக்காத்தான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செ.லிங்கராஜ், நகர துணைச் செயலாளர் ஜோதிமணி, மாவட்ட பிரதிநிதிகள் ஆ.பாஞ்ச் பீர்முகம்மது, லெ.சுப்பிரமணியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வார்டு கழக செயலாளர்கள் ஆ.சண்முகராஜா, இப்ராகிம், சேட் என்ற சேக்மதார், வேலுமணி, கருப்பசாமி, மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபி ரெசவு பாத்திமா, நகரமன்ற உறுப்பினர் இசக்கித்துரைபாண்டியன், பிரதிநிதிகள் நாட்டாமை ஆறுமுகம், ராமகிருஷ்ணன், மனோஜ், முத்துசாமி ஆசிரியர் மாடசாமி, பொறியாளர் அணி அந்தோணி, காங்கிரஸ் பிரமுகர் நடராஜன், ஆறுமுகம் உள்பட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.