![](admin/uploads/.6129cf51882f99.24266058.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. ஒன்றியத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
இதனை தொடர்ந்து பேச்சிமுத்து, ஒன்றிய பெர்துச்செயலாளர் சேர்மன், பொருளாளர் தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன், பேச்சாளர் காமராஜ் ஆகியோர் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.
மேலும் கூட்டத்தில் பாலசுப்பிரமணியன், ராஜசேகர், குமார், சுரேஷ், விஜயசேகர், கார்மேகநாதன், சேர்மகனி, ஆசிரியர் பாஸ்கர், மாடக்கண்ணு, ஆறுமுககணேசன், செல்வராஜ், முருகன், பரமசிவன், இசக்கிமுத்து, சின்னதம்பி, பாலசுப்பிரமணியன், மகாராஜன், தங்கஇசக்கி, கடல், கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைத்தலைவர் குமரேசன் நன்றி கூறினார்.