Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதைப்பொருள் ஒழிப்பு பணிக்காக போலீசாருக்கு முதல்வர் பதக்கம்

ஜுன் 26, 2023 10:48

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 2 போலீசாருக்கு, போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றியதற்காக, முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் போது, சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், போலீசாரை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார். 2023ம் ஆண்டு, சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி, உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்வரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், தேனி எஸ்.பி. டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் சப்டிவிஷன் ரயில்வே டி.எஸ்.பி. குணசேகரன், நாமக்கல் எஸ்.ஐ. முருகன், புதுச்சத்திரம் ஸ்டேசன் போலீஸ் குமார் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக மாநில அளவிலான விருது பட்டியலில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஐ., மற்றும் போலீஸ் என இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ.முருகன், போலீஸ் குமார் ஆகியோருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள், சக போலீசார் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்