Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வளையப்பட்டி அருகே சிப்காட் அமைப்பதை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

ஜுன் 26, 2023 10:52

நாமக்கல்: வளையப்பட்டி அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி தொழிற்பேட்டை அமைப்பதற்காக அப்பகுதியில் நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாயம் பாதிக்கப்படும், இயற்கை சூழல் பாதிக்கப்படும், மேலும் சிப்காட் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிப்காட் எதிர்ப்புக்குழு அமைத்து, தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் அமைச்சர்களையும், பல்வேறு அரசு உயர் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிடக்கோரி மனுக்களை அளித்து வருகின்றனர்

இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைக் கைவிடக்கோரி, சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில், வளையப்பட்டியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

இதனை தொடர்ந்து விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், பழனிவேலு, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இ.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொ.ம.தே.க., ஒன்றிய தலைவர் முருகேசன் ஆகியோர் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பேசினர். விவசாய முன்னேற்ற கழக நிர்வாகிகள் தண்டபாணி, ராமசாமி, சிப்காட் எதிர்ப்பு குழுவினர், பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்