Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சத்திரம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி துவக்கி வைத்தார்: எம்.எல்.ஏ ராமலிங்கம்  

ஜுன் 26, 2023 11:13

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணியை, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கதிராநல்லூர் பஞ்சாயத்து, கெம்மம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதையொட்டி,  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம்  கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார்.

புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கவுதம், கதிராநல்லூர் பஞ்சாயத்து தலைவர் நடராஜன், துணைத் தலைவர் சவுந்தரராஜன், தர்மகர்த்தா காளியப்பன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமார், வட்டார உதவி செயற்பொறியாளர் கல்பனா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்