![](admin/uploads/.5f168181ec9403.26862758.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 13 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி மூலம் இயங்ககூடிய 3 சக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அணியார், கீரம்பூர், கீழ்சாத்தம்பூர், மாரப்பநாய்க்கன்பட்டி, நல்லூர், பெரியகவுண்டம்பாளையம், சிங்கிலிப்பட்டி, சிவியாம்பாளையம், தளிகை, திண்டமங்கலம் ஆகிய 13 ஊராட்சிகளுக்கு இந்த வாகனம் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில், நாமக்கல் ஒன்றிய குழுத் தலைவர் சுமதி, நாமக்கல் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல், பி.டி.ஓ.க்கள் பாஸ்கர், ஜெயக்குமரன், மாவட்ட திமுக துணைச் செயலாளர் நலங்கிள்ளி, தெற்கு நகர திமுக செயலாளர் ராணா ஆனந்த் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.