Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தாயம்மாள் கலை கல்லூரியி. (தன்னாட்சி) புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி

ஜுன் 26, 2023 01:33

ராசிபுரம்: ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) உயிர்த்தொழில்நுட்பவியல் துறையுடன் ஈரோடு, ஏவ்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு, ஏவ்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இ.எஸ்.கார்த்தி மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜயகுமார்
ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி ரூபவ் சிறப்பு விரிவுரையாளர் உரை, ஆராய்ச்சிக்கான பயிற்சிப் பட்டறை நடத்தப்படுவதோடு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.

இந்நிகழ்ச்சியில் உயிர்த்தொழில்நுட்பவியல் துறையின் துறைத்தலைவர் முனைவர்.பொ.செல்வமாலீஸ்வரன் அறிமுகவுரை வழங்கினார். மேலும் துறைசார் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

தலைப்புச்செய்திகள்