![](admin/uploads/.5e579786a10084.80639648.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வாசுதேவநல்லூர்: தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தின் மாற்றுத்திறனாளிகளின் சக்ஷ்சம் அமைப்பு சார்பில் தென் தமிழ்நாடு 2023-2024 ஆண்டுக்கான மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.
மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவில் பிரைட் அப் இந்தியா விருது பெற்றவருமான அ.ஆனந்தன் கலந்து கொண்டு மாற்றத்திற்கான திறமையாளர்களுக்கு 40 மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சக்ஷ்சம் அமைப்பின் தேசிய தலைவர் இராஜகோபால், மாநில பார்வையாளர் ஆடல்அரசு, தென்தமிழக நிர்வாகிகள் நல்லகண்ணு, இராஜகோபால், உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தென்காசி ஆனந்தன் அவர்கள் பேசும் போது மாற்றுத்திறனாளிக்காக திவ்யாங் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை தெய்வீக திறன் படைத்தவர்கள் என அழைத்தவர் நரேந்திர மோடி மாற்றுத்திறனாளிகளுக்காக 50 இலட்சம் வரை கடன், பென்ஷன் மற்றும் பல நலத்திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மத்திய அரசாங்கம் என்று பேசினார்.