![](admin/uploads/.5ce23ae9872027.34684048.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோ கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி சார்பாக போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
இப்பேரணியை கல்லூரி முதல்வர் கருப்பசாமி தொடங்கி வைத்தார். பேரணி சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கி முக்கிய ரதவீதியில் நடைபெற்றது. பேரணியில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் மது ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு
வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியபடி போதைக்கு எதிரான கோஷங்களை முழங்கினர்.
பேரணியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கணபதி ,பேராசிரியை குமாரி செல்வி, கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவர் குருநாதன், உடற்கல்வி இயக்குநர்
ஈஸ்வரன், கணிதத்துறை பேராசிரியர் சிவக்குமார், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.