Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை திருமதி வசந்தி ஜான்சி ராணி தலைமை ஏற்று விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நாட்டு நல பணி திட்ட அலுவலர் வில்லியம் பீட்டர் ராஜ் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். பேரணி நல்லூர், ஆலடிப்பட்டி, காசியாபுரம் வழியாக நடைபெற்றது. தேசிய பசுமை படை பொறுப்பாளர் ஜான் அகஸ்டின், உதவி தலைமை ஆசிரியை ரோதா கேசரி, ஆசிரியர் சாமுவேல் பாஸ்கர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.