Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கருமடையூர் அங்கன்வாடிக்கு உபகரணங்கள்

ஜுன் 26, 2023 08:48

பாவூர்சத்திரம்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கருமடையூர் அங்கன்வாடிக்கு உபகரணங்களை திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வழங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக கீழப்பாவூர் பேரூர் திமுக சார்பில் கருமடையூர் அங்கன்வாடிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் செயலாளர் ரெ.ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கா.ராஜாமணி முன்னிலை வகித்தனர். 

அதனை தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, அங்கன் வாடிக்கு 25 சேர்கள், டேபிள் ஆகியவனவற்றை வழங்கினார். தொடர்ந்து அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பேரூர் துணை செயலாளர்கள் அறிவழகன், முருகன், பொருளாளர் தெய்வேந்திரன், ஒன்றிய பிரதிநிதி மலைச்சாமி, மனோகரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி இளையபெருமாள், ஆதிதிராவிடர் அணி பாலசுப்பிரமணியன், கருமடையூர் மாரிச்செல்வம், செல்வராஜ், கணேசன், குத்தாலிங்கம், கவுன்சிலர் இசக்கிமுத்து, ரவிச்சந்திரன், இசக்கிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வார்டு செயலாளர் மாரியப்பன், சாமிராஜ், பாலமுருகன், இசக்கிமுத்து, முத்துமணி துரைப்பாண்டியன், மாயாண்டி, பூங்குன்றன், சேர்மன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், தொண்டரணி துணை அமைப்பாளர் பொன்மோகன், அருணா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்