![](admin/uploads/.62f78608c67080.73945718.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் உள்ள காந்திநகர் பகுதியில் பாஜக அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி பாஜக பார்வையாளர் மகாராஜன் தலைமை வகித்தார்.
மேலும் தென்காசி மாவட்ட பாஜக செயலாளர் ராஜலஷ்மி சுந்தர்ராஜ், சங்கரன்கோவில் நகர தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு காந்தி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று பாஜகவினர் பொதுமக்களை சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அந்தோணிராஜ், வர்த்தகப் பிரிவு நகரத் துணைத் தலைவர் சுப்பிரமணியன், நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நகரத் தலைவர் சங்கர் ராஜ், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நகரத் தலைவர் பிரதீப் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.