Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதனிடம் வாழ்த்து பெற்றனர்.
மேலும் திமுக தலைவரும், முதல் வருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படியும், மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பரிந்துரையின் பேரிலும், தென்காசி தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகளை மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
அதன்படி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராக மேலகரம்பேரூராட்சி மன்ற கவுன்சிலர் நாகராஜ் எம்.சரவணார் நியமனம் செய்யப்பட்டுள்ளது. துணை அமைப்பாளர்களாக அழகுதமிழ் (களப்பணி) ஸ்ரீதர், சிங்கத்துரை, கார்த்திக் (சமூக வலைதளம்) சேகனா (மகளிர்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மாவட்ட அமைப்பாளர் நாகராஜ் எம்.சரவணார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதியும், பேரூராட்சி கவுன்சிலருமான சுந்தரம் (எ) சேகர் உடனிருந்தனர்.