![](admin/uploads/.5e88afb106efd5.19475123.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆலங்குளம்: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நாரணாபுரம் ஊராட்சி, ஆ.மருதப்பபுரம் அங்கன்வாடி மையத்தில், தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட துறையின் சார்பில், 6 மாதம் முதல் 6 வயதிற்குள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.திவ்யா மணிகண்டன் தொடங்கிவைத்தார். மேலும் நிகழ்ச்சியில், ஆலங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி, அங்கன்வாடி மைய அலுவலர் எம்.மகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்