Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆலங்குளம் "பூ உலகை காப்போம்" அமைப்பிற்கு விருது

ஜுன் 30, 2023 07:12

ஆலங்குளம்​: ஆலங்குளம் பகுதியில் தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வரும் பூ உலகை காப்போம் மன்றத்திற்கு காந்தி-கலாம் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு காந்தி - கலாம் விருது வழங்கும் விழா தென்காசியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காந்தியவாதி வி.விவேகானந்தன் தலைமை வகித்தார்.

மேலும் தென்காசி ஐஏஎஸ் அதிகாரி என்.எம்.பெருமாள் முன்னிலை வகித்தார். சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் வரவேற்றார்.அமெரிக்கா வாழ் தமிழரும், மறைந்த அப்துல்கலாமின் நண்பருமான டாக்டர் எஸ்.விஜயராகவன் விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், ஆலங்குளம் பகுதியில் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் பூ உலகை காப்போம் மன்றத்திற்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை, மன்றத் தலைவர் டி.ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் முருகன், விஜயன், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், பொன்னு, வேலு, சதீஷ்குமார், விமல், முன்னாள் ராணுவ வீரர் அசோக்குமார், ஆலோசகர்கள் இயற்கை ஆர்வலர் இளங்கோ, செஞ்சாய்  கோபி, பாலா உள்பட 31 பேர் பெற்றுக் கொண்டனர். விருது பெற்ற அமைப்பினரை, ஆலங்குளத்தைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்