Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீழப்பாவூரில் திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஜுலை 01, 2023 08:10

தென்காசி: கீழப்பாவூர் பேரூர் திமுக சார்பில் வருகின்ற (3ந்தேதி) நடைபெறவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவில், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்குகிறார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அறிவுறுத்தலின் பேரில், கீழப்பாவூர் பேரூர் திமுக சார்பில் 4 இடங்களில் திமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் கீழப்பாவூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு தேய்ப்பு, பெட்டி மற்றும் கருமடையூர் அங்கன்வாடிக்கு சேர், டேபிள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

மேலும் இதன் தொடர்ச்சியாக கீழப்பாவூர் பெரியார் திடலில் வருகின்ற (திங்கள் கிழமை) மாலை 4 மணிஅளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பேரூர் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகிக்கிறார்.

பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கா.ராஜாமணி மற்றும் பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

இதில் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கி பேசுகிறார். எனவே இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி பேரூர் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்