![](admin/uploads/.60c1fe994515e2.28262426.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் கிழக்கு மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்பரப்பிபட்டி பெண்கள் உட்பட பலர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P.சத்தியமூர்த்தி ஆலோசனை படி மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய தலைவர் P.அருள், துணை தலைவரும், ஒன்றிய பார்வையாளருமான N.S.ஹரிகரன் தலைமை தாங்கினர்.
மாவட்ட செயலாளர் R.P.தமிழரசு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொது செயலாளர்கள். நடராஜன், வெங்கடேஷ், ஒன்றிய பொறுப்பாளர்கள், சின்னுசாமி, கோபாலக்கண்ணன், வேலுசாமி, பிரகாஷ், சிவகுமார், உலகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.