![](admin/uploads/.62f7b601ee7325.23254762.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: மணிப்பூர் சம்பவத்திற்கு குமாரபாளையத்தில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மணிப்பூரில் இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தால் நாளுக்கு நாள் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
மணிப்பூர் வன்முறையை தடுத்து நிறுத்தக்கோரி, மத்திய அரசையும், மாநில அரசையும் வேண்டி, பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் சி.பி.ஐ.எம். நகர செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது.
இதில் மணிப்பூர் பிரச்சனையில் மவுனம் காக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் நிர்வாகிகள் ஆறுமுகம், குணசேகரன், பாலமுருகன், கார்த்திகேயன், மக்கள் நீதி மய்யம் காமராஜ், சித்ரா, மல்லிகா, காங்கிரஸ் தங்கராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.