Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரலாற்று புகழ் பெற்ற சோழீஸ்வரர் கோயில் தேர் திருவிழா: ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி பங்கேற்பு

ஜுலை 03, 2023 05:07

திருச்செங்கோடு: திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் சோழர் காலத்திய ஆயிரம் ஆண்டு  சோழீஸ்வரர், அழகுராயப் பெருமாள் கோவில் ஆனி மூலத் தேர் திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து பல்வேறு மண்டபக் கட்டளைகள் நடந்த நிலையில்  திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்தனர்.
முதலில் அழகுராயப் பெருமாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது. நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் வடம் பிடித்து துவக்கி வைத்தார். 

இதில் பெருமாள் தேர் நிலை சேர்ந்ததும் தொடர்ந்து சோழீஸ்வரர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேர் நிலை சேர்ந்தது . மேலகடந்த பல ஆண்டுகளாக பரபரப்புடன் நடந்து வந்த திருத்தேர் இந்த ஆண்டு அமைதியான முறையில் நடைபெற்றது.

திருத்தேர் திருவிழாவை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்